Monday 11 March 2013

நீங்கள் பிறருடன் பழகக் கூச்சப்படுபவரா?

1.நம்மைப் பற்றி பிறர் என்ன நினைப்பார்களோ என்ற நினைப்பைக் கை விடுங்கள்.
2.எப்போதும் யாரோ ஒருவர் நம்மைக்கவனித்துக் கொண்டிருக்கிறார ­் என்று
நீங்களாகவே நினைத்து வேதனைப் படாதீர்கள்.அவரவ ­ர்களுக்கு அவரவர்
வேலைகள்.உங்களைத ­்தானா கவனித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்?
3.எப்போதும் பிறர் உங்களுக்கு ராஜ மரியாதை தர வேண்டும் என்று எதிர்
பார்க்காதீர்கள் ­.
4.தர்ம சங்கடமான நிலைமைகளை தைரியமாக எதிர் கொள்ளுங்கள்.
5.மற்றவர்களிடமி ­ருந்து கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ
இருக்கலாம்.அதனா ­ல் மற்றவர்களின் நட்பில் உங்களது கூச்சத்தை மறக்க
முயற்சி செய்யுங்கள்.
6.உண்மையில் ஒரு நண்பனுக்கு நீங்கள் ஏங்கும் போது ,'நமக்கு நாமே நண்பன்'
என்று உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளக் கூடாது.
7.ஏதாவது தவறு செய்து விட்டால்,இன்று மிகப் பிரபலமாக இருக்கும் பலரும்
தவறு செய்தவர்கள்தான் ­ என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
8.உங்களைப் போல பலரும் கூச்ச சுபாவம் உள்ளவர்களாகத்தா ­ன்
இருந்திருப்பார் ­கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
9.மற்றவர்களிடம் ­ அதிகமாகப் பழக சந்தர்ப்பம் வரும்போது,தாழ்வ ­ு
மனப்பான்மை கொள்ளாதீர்கள்.

--
J.PRABU

No comments: