Thursday 28 February 2013

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள ்வது ??

மாரடைப்பை தவிர்க்க..
தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி
காப்பாற்றிக்கொள ்வது ??
மாலை மணி 6:30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு
தனியாக சென்று கொண்டிருக்கிறீர ்கள் .
அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக
உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,
நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள் , திடீரென்று
உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்.
அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உணருகிறீர்கள் ,
உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக
வைத்துக்கொள்வோம ், ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க
முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை
நாமே காக்க என்ன செய்யலாம்??
துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக
தனியாக இருந்திருப்பவரா க உள்ளனர் !
உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..நீ ங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10
நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக
ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,
ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும் ,
இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.
இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும்
வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு
இரும்முக்கொண்டே இருக்க வேண்டும்.
மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி
வகுக்கிறது , இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக
துடித்துக்கொண்ட ே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.
இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்..
பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..

Monday 25 February 2013

உங்களுக்கு தெரியுமா..?

வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர்வராது..
குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும்..
புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.
ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும். ( கொசுக்களிலுமா?)
சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.
தர்பூசணி, தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.
கனடா நாட்டவர், தங்களின் புகைபடத்தை ஸ்டாம்பாக பயன் படுத்த முடியும்.
8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.
சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது.
இயர் போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும்.
திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், வெடிக்கும்.
கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.
எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகள் போல வேறு விதமாக இருக்கும்.
40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழ்ப்பான்.
சுவீடனில், ஒரு ஹோட்டல், ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வருடமும்
மீண்டும் கட்டப்படும்.
பூனை, ஓட்டகம் மற்றும் ஓட்டக சிவிங்கி மிருகங்கள் தான், வலது, வலது,
இடது, இடது என நடக்கும், மற்றவையெல்லாம் வலது, இடது என நடக்கும்.
வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.
பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும் 10:10, புன்னகையை குறிக்கும்.
நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும். மனித மூளை, 11 வகை இராசாயணத்தை
அமைதி படுத்த அனுப்புகிறது.
லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், மறு கையால்
வரையவும் செய்வார்.
15 எழுத்து ஆங்கில வார்த்தை, எழுத்துக்கள் திரும்ப வராத வார்த்தை: uncopyrightable
குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர். 2 - 6
வயதில் தான் வளர்கிறது.
எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் மூக்கு கண்ணாடி அணிவார்கள்.
வறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது.
சூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.
கண்களை கசக்கும் போது தோன்றும் நட்சத்திரம் மற்றும் கலர்கள், பாஸ்பீன்ஸ் எனப்படும்.

--
J.PRABU

MUST SHARE IT

இந்தியாவிலுள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும்
ஒரு அறிவிப்பு... {PLEASE SHARE THIS...}
MUST SHARE IT...!!!
சாலை விபத்தில் யாரேனும்
உயிருக்கு போராடும் சூழ்நிலையில்,
தங்களின் பார்வையில் பட்டால்,
உடன் அவர்களை அருகில் உள்ள
மருத்துவ மனையில் சேர்த்து,
விபத்தில் சிக்கியவரை காப்பாற்றவேண்டியது
நமது மற்றும் மருத்துவரின் மனிதாபிமானமான கடமை.
இதற்கு மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக
முதல் தகவல் அறிக்கை (F.I.R.) கேட்கக்கூடாது
என்று நமது மாண்புமிகு உச்சநீதி மன்றம்
உத்தரவு பிறப்பித்துள்ளத ­ு....
முதலுதவி அளித்த பிறகு
காவல்துறைக்கு தகவல் தெரிவித்துகொள்ளலாம்...
தயவு செய்து இந்த செய்தியை
தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பரப்புங்கள்....
அது அனைவருக்கும் உதவியாக இருக்கும்...
ஏன்...
நாளை நமக்கே கூட உதவியாக இருக்கலாம்.....
Attention all Indian Friends……
Supreme Court has announced, any person who meet...s road accidents
can be taken to the nearby hospital immediately. Hospital must not ask
for police report to admit him,its doctors' duty to do First-aid.
Police can be informed later. Pls spread this message by sharing on
your wall .. It will help us all...!

--
J.PRABU

அறிவியல்

1. பிளாஸ்டிக் உடைவதற்கு 500 ஆண்டுகள் ஆகின்றன.
2. உலகில் மிக கொடூரமான நில நடுக்கம் 1557ல் சீனாவில் நடந்தது. இதில்
சுமார் 8 லட்சம் மக்கள்இறந்தனர்.
3.சூரியனிலிருந் ­து புறப்படும் ஒளி பூமியை அடைய 8 நிமிடம் 30 வினாடிகள்
எடுக்கின்றது.
4.சராசரியாக ஒரு மனிதன் ஐந்து முறை சிரிக்கின்றான்.
5.ஆல்பிரட் நோபல் (நோபல் பரிசுகள் இவர் பெயரால் கொடுக்கப் படுகின்றன)
1866ஆம் ஆண்டு டைனமைட்டை கண்டுபிடித்தார் ­.
6.எபோலா என்னும் வைரஸ் தாக்கினால், ஐந்தில் நான்கு மனிதர்கள் இறந்துவிடுவார்க ­ள்.
7.2010க்குள் கால்வாசி செடி இனங்கள் அழியும் அபாயம் உள்ளது.
8.உலகின் மிகச்சிறிய பறக்கும் பூச்சி,ஈயின் கண்ணைவிட சிறியது.
9.மிக வேகமாக விழும் மழைத்துளியின் வேகம் மணிக்கு 18 மைல் கள்.
10.பிற‌க்கும் 2000 குழ‌ந்தைக‌ளில் ஒரு குழ‌ந்தை ப‌ற்க‌ளுட‌ன் பிற‌க் கின்ற‌ன‌.
11.சில‌ வகை ச‌வுக்கு ம‌ர‌ங்க‌ள்ஒரு நாளைக்கு 3 அடி வ‌ள‌ர்கின்ற‌ன.
12.ச‌ராச‌ரியாக‌ ­ ஒரு ம‌னித‌ன் 4850 வார்த்தைக‌ளை 24 ம‌ணி நேர‌த் தில்
ப‌ய‌ன்ப‌டுத்துக ­ின்றான்.
13.லியானார்டோ டார்வின்சி ஒரு கையில் எழுதிக்கொண்டே ம‌று கையில்
வ‌ரையுவும் செய்வார்.
14. க‌ண்க‌ளை திற‌ந்துவைத்து தும்முவ‌து சாத்திய‌மில்லை
15. நாம் ப‌ய‌ன்ப‌டுத்தும ­் toothbrushக‌ளை க‌ழிவ‌றையில் இருந்து
குறைந்த‌து ஆறு அடி த‌ள்ளி வைக்க‌ வேண்டுமென‌ ப‌ல் ம‌ருத்துவ‌ர் க‌ள்
ப‌ரிந்துரைக்கின ­்றார்க‌ள்.
16.க‌ர‌ப்பான்பூ ­ச்சி த‌லையின்றி ப‌த்து நாள் வ‌ரை உயிர் வாழும்
17.விர‌ல்க‌ளில் ­ ந‌க‌ங்க‌ள் வ‌ள‌ர்வ‌து இய‌ற்கை. அதில் ஆட்காட்டி விர‌
லில் மிக‌ நிதான‌மாக‌வும், ­ ந‌டுவிர‌லில் மிக‌ வேக‌மாக‌வும் வ‌ள‌ரு
மாம்.
18. நான்கு வய‌து குழ‌ந்தை நாளைக்கு நானூறு கேள்விக‌ள் கேட் கின்ற‌தாம்.
19. ஒவ்வொருவ‌ரின் கை ரேகையும் த‌னித்துவ‌மான‌த ­ு. அதே போல‌ தான் நா ரேகையும்
20. ப‌ன்றிக‌ள் தானாக‌ வான‌த்தை பார்ப்ப‌து சாத்திய‌மே இல்லை
21. கெட்டுப்போகாத‌ உண‌வுப்பொருள் ‍ தேன்
22. ந‌த்தை தொட‌ர்ந்து மூன்று வ‌ருட‌ங்க‌ள் தூங்க‌லாம்.
23. ப‌ட்டாம்பூச்சிக ­‌ள் த‌ங்க‌ள் பாத‌ங்க‌ளினால் சுவைக்கின்ற‌ன‌.
24. கிளியும் முய‌லும் த‌ங்க‌ள் பின்னால் இருப்ப‌தை த‌லை திருப்பா ம‌ல்
காண‌முடியும்.
25. நீர் யானை ம‌னித‌னை விட‌ மிக‌ப்பெரிய‌து, ­ ஆனால் அது ம‌னித‌ னை விட‌
வேக‌மாக‌ ஓடும்.
26. க‌ண் இமைக‌ளில் ம‌னித‌னுக்கு550 முடி இருக்கின்ற‌து.
27. அண்டார்டிகா க‌ண்ட‌த்தில் ம‌ட்டும் நிலங்கள் க‌ட‌ல் ம‌ட்ட‌த்திற்கு
கீழே எங்கும் இல்லை.எல்லா இட‌மும் க‌ட‌ல் ம‌ட்ட‌த்திற்கு மேல் தான்
உள்ள‌து.
28. வாத்தின் குவாக் குவாக் ச‌த்த‌த்தை கேட்டிருக்கின்ற ­ீர்க‌ள் அல்ல‌
வா? அத‌ன் ஒலி ம‌ட்டும் எதிரொலிப்ப‌தே இல்லை. இதுவ‌ரை ஏன் என் று
தெரிய‌வில்லை.
29. டைப் ரைட்ட‌ரில் முத‌ன் முத‌லாக‌ த‌ட்ட‌ச்ச‌ப்ப‌ட ­்ட‌ நாவ‌ல் ‍ டாம்சா ய‌ர்
30. த‌ங்க‌ மீனை இருட்டு அறையில் வைத்திருந்தால் அது வெண்மை யாக‌ மாறிவிடுமாம்.
31. ப‌னிக்க‌ர‌டிக‌ள ­் ஒரே அம‌ர்வில் 86 பென்குயின்க‌ளை விழுங்கு மாம்.
32. டான்பின்க‌ள் ஒரு க‌ண்னை திற‌ந்து வைத்த‌ப‌டியே உற‌ங்குகின் ற‌ன‌.
33. மாடுக‌ளை மாடிப்ப‌டிக‌ள் ஏற‌வைக்க‌லாம், இற‌ங்க‌ வைக்க‌ முடி யாது.
34. ம‌னித‌னின் மூக்கும் காதும் வ‌ள‌ர்ந்துகொண்ட ­ே போகும், ஆனா ல்
க‌ண்க‌ள் வ‌ள‌ராது.
35. வ‌யிறு நிறைய‌ உண்ட‌ பிற‌கு, ச‌ற்று நேர‌ம் கேட்கும‌ திற‌ன் குறை யுமாம்

--
J.PRABU

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்க ­­ளால் பயன்படுத்தப்படு ­வது
USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை.
வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாகபென்டிரைவில்
புகுந்து உள்ளே இருக்கும்பைல்கள ­­ை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள்பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவி
­­டும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது.
வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள்
இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து
வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில்
Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான
தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு
வருவது என பார்ப்போம்.
இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து
உபயோகிக்க வேண்டியதில்லை.உ ­­ங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம்.
கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.
1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.
2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.
3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer
செல்வதன் மூலம் கண்டறியலாம்.
4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்துகொள்வோம் அதற்கு
நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.
5) attrib -h -s -r /s / ­d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும
­­் Space சரியாககொடுக்கவு ­ம்.
◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர் ­­கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.
◦சில வினாடிகள் பொறுத்திருங்கள் ­. இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து
பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்

--
J.PRABU

பெட்ரோல் & டீசல் சேமிக்க சில‌ வழிமுறைகள்

1. வாகனங்களின் டயர்களில் சரியானகாற்றழுத்ததை சீராக பராமரிப்பு மிகவும்
அவசியம். அதிகப்படியான காற்று அல்லது குறைவான காற்று போன்ற காரணங்களால்
மைலேஜ் கிடைக்காது மற்றும் டயர்களை பாதிக்கும். நிறுவனத்தார் கொடுத்த
காற்றழு த்ததை மட்டுமே பராமரிக்க வேண்டும்.
2. புதிய டயர்கள் மாற்றும்பொழுதுவாகன தயாரிப்பாளர் பரிந்து ரைத்த டயர்களை
மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
3. காலை நேரங்களில் மட்டும் எரிபொருளினை நிரப்ப முயற்சியு ங்கள்.
எரிபொருளின் ஸ்பெசிபிக் க்ராவிட்டி(spec ific gravity) காலை நேரங்களில்
அதிகமாக இருக்கும்.
4. எரிபொருள் கலனில் எப்பொழுதும்அறை பங்கிற்க்குமேல் எரிபொருள்
இருக்கும்படி பார்த் துக்கொள்ளுங்கள் . இதனால் எரிபொருள் சரியான
அழுத்ததில் செல்ல பெரிதும் உதவும்.
5. வாகனத்தின் பராமரிப்பு மிகவும் அவசியமாகும். சரியான காலஇடைவெளியில்
பராமரித்தால் தேவையற்ற செலவுகளை தவர் க்கலாம்.வாகனத்தின் செயல்திறனும்
சிறப் பாக இருக்கும்.
6.எக்காரணம்கொண் டு தயாரிப்பாளர்பரிந்து ரைக்காத எரிபொருள், அடிட்டீவஸ்
பயன் படுத்தாதீர்கள்.
7. வாகனத்தை இயக்கும் பொழுது தேவையான அளவே அக்ஸி லேட்ர்களை கொடுங்கள்.
திடீரென அதிகப்படியான அக்ஸிலேட்ர் கொடுப்பதை தவிர்ப்பது மிகவும் நல் லது.
பிரேக் பிடிப்பதில் கவனம் கொள்ளுங்கள் அக்ஸிலேட்டர்கொடு த்தவுடன்
உடனடியாக பிரேக் கொடுக் காதீர். சிக்னல்களில் திடீரென வேகம்
எடுக்காதீர்கள். சீரான வேகத்திலே வாகனத்தை இயக்குங்கள்.
8. அதிவேகம் மிகுந்த ஆபத்தானவை அதேபோல எரிபொருளும் அதிகம் தேவைப்படும்.
டாப் க்யரிலும் மெதுவாக செல்வது எரி பொருளை சேமிக்க உதவும்.சராசரியா க
50-60 கீமி வேகத்தில் பயணிக்க முயலுங்கள்.
9. 2 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய அவசியம் இருந்தால் வாகன
த்தை அனைத்து விடுங்கள்.
10. க்ளட்ச் மீது க்யர் மாற்றும்பொழுது மட்டுமே காலினை பயன் படுத்தவும்.
11. தொடர்ந்து நிலையான வேகத்தை பயன்படுத்துங்கள ்.

--
J.PRABU

பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும்

பென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல்,கிட்டத்தட்ட
அனைவருமே பயன்படுத்தும் ஒரு Removable Device ஆகும்.
இத்தகைய பென்டிரைவ்கள்(p endrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போ து
சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக
இயங்கும். அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம்
எடுத்துக்கொள்ளு ம். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி?
உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
1.உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள். (win+E)கொடுத்து MY COMPUTER செல்லவும்.
2.அங்கு பென்டிரைவிற்கான டிரைவை வலது கிளிக் செய்து Properties என்பதைத்
தேர்ந்தெடுக்கவு ம்.
3.தொடர்ந்து திறக்கும் விண்டோவில் HARDWARE என்னும் டேபை கிளிக்
செய்யவும். பிறகு Name என்னும் தலைப்பின் கீழுள்ள உங்கள் பென்டிரைவைத்
தேரந்தெடுக்கவும ்.
4.பிறகு கீழிருக்கும் Properties என்பதை கிளிக் செய்து Ok கொடுக்கவும்.
5.அடுத்து தோன்றும் விண்டோவில் change settings என்பதை கிளிக் செய்யவும்.
6.அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில் Policies எனும் டேபிள் கிளிக்
செய்து அதன் கீழிருக்கும் Better Performanceஎன்பதைத் தேர்ந்தெடுத்து OK
கொடுக்கவும்.
இப்போது உங்கள் பென்டிரைவ் முன்பைக் காட்டிலும் வேகமாக இயங்கும். இதை
நீங்கள் கண்கூடாக காண்பீர்கள். இந்த அனுபவம் எப்படி இருக்கிறது என்பதை
கருத்துரையில் சொல்லுங்கள்.
மறக்காமல் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை கணினியிலிருந்து நீக்கும்போது
Safely remove hardware என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென் டிரைவை
கணினியிலிருந்து நீக்கவும். இதை ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங
்கள். இதனால் உங்கள் பென்டிரைவ் சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும்...!


--
J.PRABU

Wednesday 20 February 2013

ஈபிள் கோபுரம்


                   *ஈபிள் கோபுரம் - சில முக்கியத் தகவல்கள்.*



பிரஞ்சு நாட்டில் உள்ள ஈபிள் கோபுரம் (Eiffel Tower) 1889 மார்ச் 31ஆம் தேதி
திறக்கப்பட்டது. இது அகில உலகக் கண்காட்சி மற்றும் பிரெஞ்சுப் புரட்சி
நூற்றாண்டு நிறைவு ஆகியவற்றை நினைவு கூறும் சின்னமாக உருவாக்கப்பட்டது. 1887
இல் கட்டத் தொடங்கிய காலத்தில் இதனை 20 வருடம் கழித்து இடிக்கத் திட்டமிட்டனர்.
ஆனால் அந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. உலக புகழ் பெற்ற ஈபிள் கோபுரம்
தொடர்பான மேலும் சில முக்கிய தகவல்கள்கள்.

   -

   கோபுரத்தின் மொத்த உயரம் 984 அடி (324 மீட்டர்) நிலப்பரப்பு 2.5 ஏக்கர்
   (412 சதுர அடி, 100 சதுர மீட்டர்).

  கோபுரம் முழுவதும் 18,038 சிறப்பு உருக்கு இரும்புத் துண்டங்களால்
உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துண்டங்கள் அனைத்தும் 2.5 மில்லியன் போல்ட்கள் (bolts)
கொண்டு பொருத்தப்பட்டுள்ளன.

இந்தக் கோபுரத்தின் மொத்த எடை 10,100 டன்கள் எனவும் இதில் இரும்பு பாகத்தின்
எடை 7,300 டன்களாகவும் உள்ளது.

இக்கோபுரத்திற்கு 7 வருங்களுக்கு ஒருமுறை தூரிகை உதவியுடன் வர்ணம்
தீட்டப்படுகின்றது. இதுவரை வர்ணம் தீட்ட நவீன முறைகள் எதுவும்
பயன்படுத்தப்படவில்லை.

வர்ணம் தீட்டுவதற்கு 60 டன் எடை உடையதும் மண் நிறம் கொண்டதுமான வர்ணக்கலவை
ஒவ்வொரு முறையும் பயன்படுத்தப்படுகின்றது.

இக்கோபுரம் மொத்தமாக மூன்று தட்டுக்களாக அமைந்துள்ளது. இந்த அமைப்பில் உள்ள
மொத்த படிக்கட்டுக்கள் எண்ணிக்கை 1,665 ஆகவும் இதற்குத் துணையாக 8 மின்தூக்கி (
Elevator) வசதியும் உள்ளது .

இக்கோபுரம் ஒவ்வொரு தட்டுக்களிலும் உணவகம், கண்காட்சி மண்டபம், ஓய்வெடுக்கும்
பகுதி, சுற்றுலா வெளி, தகவல் நிலயம் என்பவற்றைக் கொண்டுள்ளது.

இந்தக் கோபுரத்தின் உச்சி பகுதி 1909 ஆம் ஆண்டிலிருந்து வானொலி ஒலிபரப்பு
தேவைக்கும் 1957-லிருந்து தொலைக்காட்சி ஒளிபரப்பு தேவைக்கும்
பயன்படுத்தப்படுகின்றது. இத்துடன் கோபுரத்தின் கீழ்பகுதியில் சுரங்க வானொலி
நிலையமும் இயங்குகின்றது.

இக்கோபுரம் 42 மைல் தூரத்தில் இருந்து தெளிவான காலநிலையில் கண்களுக்குத் தெரி
கின்றது.

பிரஞ்சு நாட்டின் 72 விஞ்ஞனிகள் பெயர்கள் கோபுரத்தின் அடிப்பாகத்தின் நான்கு
முகப்புக்களில் ஒவ்வொன்றிலும் 18 பெயர் விகிதம் பொறிக்கப்பட்டுள்ளது.

இதனை 121 வேலையாட்கள் 2 வருடம் 2 மாதம் கொண்ட காலத்தில் கட்டி முடித்தார்கள்.

கோடை வெய்யில் கோபுரத்தின் பக்கவாட்டில் படும் வேளையில் மொத்தக் கோபுரமானது
அதிகபட்சம் 18 சென்டி மீட்டர் முன்நோக்கி வளைவதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

அசாதாரணக் காற்றின் சீற்றத்தில் சிக்கும் நேரங்களில் இதன் உச்சிப் பகுதி 15 சென்டி
மீட்டர் பக்கம் பக்கமாக ஊசலாடுவது கண்டறியப்பட்டுள்ளது.

இக் கோபுரம் கட்டி முடிக்கப்பட்ட காலத்தில் இருந்து 1930 ஆம் வருடம் வரைசுமார் 40
வருடங்கள் உலகின் மிகவும் உயரமான கோபுரம் என்கிற புகழைப் பெற்றிருந்தது.

இக்கோபுரம இதுவரை 243 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பார்வையிடப் பட்டுள்ளது.



--
J.PRABU

Monday 11 February 2013

பத்மா ஸ்ரீ கமலகாசன்

எனது மதம் மட்டுமே சிறந்தது அதுமட்டுமே எனக்கு வேண்டும் எனச் சொல்லும்
ஒரு இந்துவோ அல்லது இஸ்லாமியரோ அல்லது மற்ற மதத்தவரோ, ஆபத்து என்றவுடன்
ரத்த வங்கிகளில் ஏனய்யா O நெகடிவ் கொடுங்க B பாசிட்டிவ் கொடுங்கனு
கேக்குறிங்க ? ஒரு யூனிட் இந்து ரத்தம் கொடு இல்ல இரண்டு யூனிட் முஸ்லிம்
ரத்தம் கொடுன்னு கேக்க வேண்டியதானே.? அந்த நொடியில் மதத்தை மறக்கும்
நீங்கள் ஏன் மற்ற நேரங்களில் இருக்கிப் பிடித்துக்கொள்கிறீர்கள் ? -பத்மா
ஸ்ரீ கமலகாசன்


--
J.PRABU

MEDICINES ORIGINAL OR DUPLICATE

DO U KNOW Ur MEDICINES ORIGINAL OR DUPLICATE...? IF YOU WANT TO KNOW
THAT THE DRUG WHICH YOU BROUGHT FROM THE STORE ARE ORIGINAL OR
DUPLICATE IS JUST BY EASY 3 STEPS.... BY DR.TRILOK RAVAL BEHIND THE
EACH MEDICINE THEREIS ONE NUMBER WHICH IS THE UNIQUE ID NUMBER... JUST
MSG THAT NUMBER TO 9901099010 AFTER 10 SEC. YOU WILL GET ONE RESPONSE
MSG.... IF THE MEDICINE IS ORIGINAL THEN YOU WILL GET THE REPLY WITH
THE PROPER BATCH NUMBER AND THE NAME OFTHE PHARMA COMPANY.... WHICH
YOU CAN CROSS CHECK WITH YOURSTRIPS OR ANY MEDICINE WHICH YOU
BROUGHT.... AND IF THE NUMBER IS NOT MATCHING THEN YOU JUST HAVE TO
RESEND THE SAME MSG SO THE COMPLAINT WILL BE REGISTERED.... PLZ SHARE
TO ALL...!


--
J.PRABU

விதியையும் மாற்றி அமைக்கலாம்

ஒரு முறை ஜப்பானிய ராஜா எதிரிகளை தாக்க ஓர் இராணுவ படை ஒன்றை தயார்
செய்து, போருக்கு தயாரானார். அவர் "எப்படியும் இந்த போரில் வெற்றி
பெறுவோம்" என்று நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அந்த படையினரோபெரும்
சந்தேகத்துடனேயே இருந்தனர். இதனால் அந்த ராஜா தன் படை வீரர்களுக்கு
தைரியத்தை வரவழைக்க என்ன செய்யலாம் என்று ஒரு ஜென் துறவியைப் பார்த்து,
கேட்கச் சென்றார். அப்போது அந்த துறவி ராஜாவிடம், ஒரு யோசனையை சொன்னார்.
அதேப்போல் ராஜாவும் செய்தார். அது என்னவென்றால், அந்த ராஜா போர் செல்லும்
வழியில், அவர்கள் குல தெய்வ கோவிலில் நிறுத்தி பிரார்த்தனைசெய்து, ஒரு
நாணயத்தை எடுத்து வீரர்களின் முன் "நான் இப்போது இந்த நாணயத்தை சுழற்றி
விடுவேன், தலை விழுந்தால் நாம் வெற்றி பெறுவோம் இல்லையேல் போரில்
தோற்போம்" என்று துறவி சொன்னதைச் சொல்லி, பின் அவர்களிடம் "நம் தலை
விதியை இந்த நாணயம் சொல்லும்" என்று கூறி நாணயத்தை சுழற்றினார். அனைவரும்
அதை கூர்ந்து கவனித்தனர். அப்போது தலை விழுந்தது. அதனால் அந்த வீரர்கள்
நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடனும் சந்தோசத்துடனும்
எதிரிகளை தாக்கி வெற்றிப் பெற்றனர். யுத்தத்திற்கு பின்னர், துணை மந்திரி
"விதியை யாராலும் மாற்ற முடியாது." என்று ராஜாவிடம் சொல்ல "ஆம், என்று
ராஜா சொல்லி அந்த நாணயத்தின் இரு பக்கத்திலும் தலை இருப்பதை"
காண்பித்தார். நம்பிக்கையுடன் செயல்பட்டால் எத்தகைய காரியத்தையும்
எளிதில்வெல்லலாம், விதியையும் மாற்றி அமைக்கலாம்...!


--
J.PRABU

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி

இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு
பிரச்சினை தேவை இல்லாத Service - களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து
பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம்
கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக
தப்பிக்கும் வழியை பார்ப்போம். இப்படி நமக்கு Activate செய்யப்படும்
சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர். Dialer
Tune/Caller Tune, Wallpaper, SMS(Joke, Devotional மற்றும் பல) மற்றும்
பல இதில் வரும். இம்மாதிரி பிரச்சினை எந்த நெட்வொர்க்கில்
வந்தாலும்நீங்கள் 155223 என்ற அலைபேசி எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த
Service Activate செய்து உள்ளீர்களோ அதை Cancel செய்து விடலாம். தவறுதலாக
எடுக்கப்பட்டிருந்து நீங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு
Complaint செய்தால் உங்கள் பணம் திரும்ப கொடுக்கப்பட்டு விடும். 24 மணி
நேரத்திற்கு பின் நீங்கள் Call செய்தால் சர்வீஸ் மட்டும் கான்சல்
செய்யப்படும். நீங்களாக Activate செய்த சர்வீஸ்களையும் இதில் Deactivate
செய்யலாம். அநேகமாக அனைத்து நிறுவனங்களும் தற்போதுஇதை கொண்டு
வந்துவிட்டன. உங்கள்நெட்வொர்க்குக்கும் இது வந்து விட்டதா என்று அழைத்து
பாருங்கள்...! அழைக்க வேண்டிய எண் - 155223


--
J.PRABU

சில அரிய சுவையான தகவல்கள்

1. திருப்பதியில் 200 ஆண்டுகளுக்கு முன்னர்"புளியோதரை"தான்
பிரசாதம்,லட்டு கிடையாது.
2.ஆப்கானிஸ்தானி ல் ரயில் கிடையாது.
3. இந்தியாவில் தமிழில் தான்"பைபிள்" முதலில் மொழிபெயர்க்கப்ப ட்டது.
4.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரேபெண் சிங்கம் சாப்பிடும்.
5. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.
6. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.
7.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.
8. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.
9.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள்26 ஆகும்.
10. அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.
விஞ்ஞானிகள், மாவீரர்கள்,அறிஞ ர்கள் ஆகியோரில் சிலரினை பற்றிய சில அரிய
சுவையான தகவல்கள்.
1)தோமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள் தான்.
2)தோமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம்.
3) அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோம ரும் எழுதப்,படிக்கத் தெரியாதவர்கள்.
4) மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.
5) மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்.
6)அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி
பேசவல்லவராக இருக்கவில்லையாம ், இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி
குன்றியவராக கருதினார்கள்.
7) 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க
முன்வந்தது, ஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட் டார்.

--
J.PRABU

காந்தி

தீவிரவாதம் தன்னுடைய முகத்தை மத நம்பிக்கையால் மூடிவைத்து இருக்கிறது. மத
நம்பிக்கையின் பின்னணியில் அதே மதத்தைச் சேர்ந்த மக்கள், அப்பாவித்தனமாக
ஒன்று சேருகின்றனர். அரசாங்கத்தின் இரும்புக்கரம் அழுத்தமாகப் பதிவதற்கு
இதுவே தடையாக இருக்கிறது.
ஏதோ ஒரு சிலர் செய்யும் பயங்கரவாதக் காரியங்களுக்காக ஒட்டுமொத்த சமூகமும்
பழியைச் சுமக்க வேண்டியுள்ளது. மேலும், அந்தச் சமூக மக்களும் மத
உணர்வுகளையும் தீவிரவாதக் காரியங்களையும் இனம் பிரித்து அடையாளம் காணப்
பழகிக்கொள்ள வேண்டும்.
'ஒரு பாகிஸ்தானியன் இறந்து இந்தியா வாழ வேண்டுமானால், அப்படிப்பட்ட
இந்தியா எனக்குத் தேவை இல்லை. ஓர் இந்து இறந்தால்தான் பாகிஸ்தான்
வாழும்என்றால், அப்படிப்பட்ட பாகிஸ்தான் அவசியம் இல்லை' என்றுதன்னுடைய
மரணத்துக்கு முன்னால் கம்பீரமாகச் சொன்னவர் காந்தி.
இந்த எண்ணத்தை அனைத்து மக்களும் மனதில் கொண்டால்தான் தீவிரவாதத்தை ஒடுக்க
முடியும்...!

--
J.PRABU