Tuesday 13 March 2018

கதவை பார்த்த பலர் எப்படி திறப்பது என்றும்தயங்கினர் !


ஒரு ராஜா அவரோட
தளபதிக்கு வயசாயிடுச்சுனு வேற
ஒரு தளபதி நியமிக்க முடிவு செஞ்சாரு.
இதை கேள்விப்பட்டு பல பேர் போட்டி போட முன்வந்தாங்க.
ராஜா, தகுதி உள்ள எல்லாரையும்
அரண்மனைக்கு வரச்சொல்லி, ” இந்த
கோட்டைக்குள்ள பின்பக்கத்துல பெரிய 40
அடி உயரமுள்ள ஒரு வாசல் இருக்கு. அதோட
கதவு நல்ல கனமான உலோகத்தில் செஞ்சது.
இதுவரைக்கும் யாராலயும் அதை திறக்க
முடியலை”. அப்படி, இப்படின்னு 30 நிமிஷம்
ராஜா பேசினாரு.
இதுக்கு முன்னாடி பெரிய்ய வீரர்கள் எல்லாம்இருந்திருப்பாங்க .அவங்களாலயே திறக்கமுடியல ! நம்மால
எப்பிடி முடியும்னு கிளம்பிட்டாங்க.
இதை கேட்ட கூட்டம் 10
பேரா குறைஞ்சுடுச்சு! .
ராஜா மீதமிருந்த 10 பேரையும் அந்த
இடத்துக்கு கூட்டிக்கிட்டு போனார். எல்லாரும்அந்த கதவை பார்த்து பிரமிச்சு
நின்னுகிட்டுருந்தாங்க!! இந்த
கதவை திறப்பவர்களுக்கு தளபதி ஆகிற
தகுதி இருக்கிறது என ராஜா எல்லாரிடமும்
கூறினார் .
கதவை பார்த்த பலர் எப்படி திறப்பது என்றும்தயங்கினர் !
ஒருத்தன் மட்டும் கதவு கிட்ட போய்
கையை வெச்சு தள்ளி பார்த்தான். அடஎன்ன
ஆச்சரியம் கதவு திறந்துடுச்சு!!!
பல பேர் தயங்குவதனாலும்,
ஒருவர் சொல்வதனாலும் முயற்சி செய்யாமல்
இருக்கிறதுதான் முதல் கோழைத்தனம்!
என ராஜா அவனையே பாராட்டி தளபதி பதவியைவழங்கினார்...
“அது முடியாத காரியம்” என எப்போது உன்
காதுகளில் யாராவது சொல்லி விழுகிறதோ
அப்போதே புரிந்து கொள் நீ
சாதிப்பதற்க்கு அருகில் வந்துவிட்டாய்
என்று !!!!!!!பிறகென்ன தூள் கிளம்புங்க.

அவருக்கு நான் அவருடன் போட்டி போட்டதே தெரியாது


“ஒரு நாள் வழக்கம்போல நான் ஜாகிங் செய்துகொண்டிருந்த போது, எனக்கு முன்னால் சற்றுத் தொலைவில் ஒருவர் ஜாகிங் பண்ணிக் கொண்டு போய் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.
அவர் கொஞ்சம் மெதுவாக ஓடிக் கொண்டிருந்தார் என்று தோன்றியது.
சட்டென்று மனதில் ஒரு எண்ணம்.
அவரை முந்திக் கொண்டு ஓடவேண்டும் என்று ஒரு உந்துதல். என் வீட்டுக்குப் போவதற்கு இன்னும் நான்கு ஐந்து தெருக்கள் தாண்ட வேண்டும். அதற்குள் அவரை பிடித்து விடலாம் என்று நினைத்து வேகமாக ஓட ஆரம்பித்தேன்.
மெதுமெதுவே அவரை நெருங்கிக் கொண்டிருதேன். அவரை முந்துவதற்கு இன்னும் சில 1௦௦ அடிகளே இருந்தன. என் வேகத்தை சட்டென்று கூட்டினேன்.
இப்போது என்னைப் பார்ப்பவர்கள் நான் ஏதோ ஒலிம்பிக்ஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள பயிற்சி மேற்கொண்டிருக்கிறேனோ என்று நினைப்பார்கள்! அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற முடிவுடன் ஓடி…… ஓடி……..அவரைப் பிடித்தே விட்டேன் கடைசியில்! உள்ளுக்குள் ஒரு பெருமிதம்!
‘அப்பாடி, முந்தி விட்டேன்!’
பின்னால் திரும்பிப் பார்த்தேன். அவர் போக்கில் அவர் வந்து கொண்டிருந்தார். அவருக்கு நான் அவருடன் போட்டி போட்டதே தெரியாது!
சந்தோஷம் சற்று அடங்கிய பின் தான் நான் என் பாதையை தவற விட்டு விட்டதை உணர்ந்தேன்!
அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஓடிய நான், நான் திரும்ப வேண்டிய தெருவை விட்டு விட்டு ஆறு தெருக்கள் தாண்டி வந்து விட்டேன்.
இப்போது வந்த வழியே திரும்பி அத்தனை தூரத்தையும் கடந்து நான் என் வீட்டிற்கு போக வேண்டும்.
இதேபோலத்தான் நம் வாழ்விலும் சிலசமயம் நடக்கிறது, இல்லையா?
நம்முடன் வேலை செய்பவர்களுடனும், அண்டை அயலில் இருப்பவர்களுடனும், நண்பர்களுடனும், குடும்பத்தவர்களுடனும் போட்டி போட்டு அவர்களை மிஞ்ச வேண்டும் என்றோ, அல்லது அவர்களை விட நாம் பெரியவர்கள் என்றோ நிரூபிக்க முயலும் போதும் இதே தான் நடக்கிறது இல்லையா?
நம்முடைய நேரத்தையும் சக்தியையும் மற்றவர்களை விட வெற்றிகரமானவர்கள் / முக்கியமானவர்கள் என்று நிரூபிப்பதிலேயே செலவழிக்கிறோம். நம்முடைய பொறுப்புகளை மறக்கிறோம். நாம் பயணம் செய்ய வேண்டிய பாதைகளை மறக்கிறோம்.
நமக்கென்று கடவுள் கொடுத்திருக்கும் வேலைகளை செய்யத் தவறுகிறோம்.
இந்த மாதிரியான ஆரோக்கியமில்லாத போட்டி முடிவில்லாத ஒரு சுழல். இந்தச் சுழலில் மாட்டிக் கொண்டுவிட்டால் வெளியே வருவது கடினம்.
சற்றே சிந்திக்கலாமா நட்பூக்களே

எதிர்மறை எண்ணங்களை களைவது எப்படி?



எவ்வளவு உத்வேகமான ஆளாக இருந்தாலும், எதிர்மறை எண்ணங்கள் அவர்களை புரட்டிப்போட்டுவிடும். எதிர்மறை எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக்கூட்டும் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருக்கும். அதை நிறுத்துவது மிகவும் கடினம் போல நமக்கு தோன்றும். அவை நமக்கு விரைவில் கொடுப்பது வலியும் வேதனையும்தான். இதை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன்.
எதிர்மறை எண்ணங்கள் நம்மை இந்த நொடியில் ஒட்டாமல் செய்துவிடும். அவற்றை நாம் நிறுத்தாவிடில் அவை மிகவும் வலிமை கொண்டதாக மாறிவிடும். அதன் சக்தியை இப்படியும் சொல்லலாம்.. ஒரு மேடான பகுதியிலிருந்து உருண்டோடி வருகின்ற பந்து உருள உருள பெரிதாகிக்கொண்டே வருவதைப்போன்றது.
நேர்மறை எண்ணங்களுக்கும் அதேபோன்ற சக்தி உண்டு.
எதிர்மறை எண்ணங்கள் பொங்கி வழியும்போது அதைப்போக்க எனக்கு உதவிய 10 விஷயங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன்.
1. தியானம்
தியானமோ யோகாவோ எதுவாக இருந்தாலும் சரி அது இறைநம்பிக்கை கொண்டதாகவோ அல்லது சாதரணமானதாகவோ இருக்கலாம். ஆனால் என்ன நடக்கும் என்ற பயத்தை போக்கி உங்கள் வாழ்வின் இந்த நிமிடத்தில் உங்களை வாழவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
2. புன்னகை
கடினமான நொடிகளில் சிரிப்பது மிகவும் கடினமாக தோன்றும். ஒரு கண்ணாடியின் முன்பு உங்களை நிறுத்திக்கொள்ளுங்கள். உங்கள் முகத்தை பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக புன்னகையை வரவழையுங்கள். முடிந்தால் ஏதாவது காமெடி சேனல் போட்டு பாருங்கள். சிறிது நேரத்தில் உங்கள் இறுக்கம் குறைந்து தசைநார்கள் இலகுவாகிவிடும். சிரிப்பைவிட சிறந்த மருந்து உலகில் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.
3. நண்பர்கள்
முடிந்தவரை நேர்மறையாக பேசும் நண்பர்கள் சூழ இருங்கள். உங்களை அறியாமலே அவர்கள் உங்கள் கவனத்தை மாற்றுவார்கள்.
4. எண்ணங்களை நேர்மறைக்கு மாற்றுதல்
சிரமங்களை பற்றியும் கஷ்டங்களை பற்றியும் நினைப்பதை கொஞ்சம் மாற்றி, சவால் இருந்தாலும் சமாளிக்கலாம் என்று நினைத்துப்பாருங்கள்.
5. குறைகூறாதீர்கள்
உங்களைப் பற்றியோ மற்றவர்களை பற்றியோ குறைகூறுவதை முதலில் நிறுத்துங்கள். அது எந்தவிதத்திலும் உங்களுக்கு உதவப்போவதில்லை. அப்படியே ஏதேனும் தவறு நடந்திருந்தால் அதை சரிசெய்ய உங்கள் பங்கு என்ன என்பதை நினைத்துப்பாருங்கள். நல்லதே நடக்கும்.
6. உதவுங்கள்
எதிர்மறை எண்ணங்களின் கவனத்தை திசைதிருப்ப இதைவிட சரியான வழி இருப்பதாய் தோன்றவில்லை அடுத்தவருக்கு ஏதாவது ஒரு உதவி (அது சிறியதோ அல்லது பெரியதோ) செய்யும்போது உங்கள் மனதில் தானாகவே நேர்மறை எண்ணங்கள் முளைவிட துவங்கும்.
7. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
தவறுகள் அற்ற மிகவும் சரியான மனிதன் யாரும் கிடையாது. நடந்தது நல்லதற்கே என்று நினைத்து சம்பவங்களை நேர்மறையாக எதிர்கொள்ளும்போது, அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.
8. பாடுங்கள்
உங்களுக்கு தெரிந்த ஏதாவது பாடலை முனுமுனுக்க துவங்குங்கள் அது உங்கள் மனதின் சுமையை குறைத்து லேசாக்கும்.
9. நன்றி கூறுங்கள்
நன்றி கூறுவதைவிட சிறந்த நேர்மறை உணர்வு இருக்கமுடியாது. ஏற்கெனவே நீங்கள் பெற்றிருக்கும் அனைத்திற்கும் நன்றி கூறுங்கள். அது மேலும் நல்ல சம்பவங்களையும் இன்னும் அதிக நேர்மறை எண்ணங்களையும் உங்களிடம் இழுத்து வரும்.
10. நல்லதை படியுங்கள்
தினமும் காலையில் செய்தித்தாள் படிப்பவரா நீங்கள்? முடிந்தவரை அதில் உள்ள எதிர்மறை செய்திகளை படிக்காதீர்கள். அது மேலும் எதிர்மறை எண்ணங்களை உங்களிடம் தூண்டிவிடும். தூண்டப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் உங்களிடம் அதேபோன்ற கெட்ட சம்பவங்களை உங்களிடம் இழுத்துவரும். ஏனென்றால் நீங்கள் அதில் உங்கள் கவனத்தை செலுத்தினீர்கள் அல்லவா..? முடிந்தவரை நல்ல செய்திகளையும் நல்ல வாசகங்களையும் படியுங்கள். அது எப்போதுமே உங்களுக்கு நல்லது.
எங்கேயோ படித்தது நினைவுக்கு வருகிறது..
உங்கள் எண்ணங்களை கவனியுங்கள், அது சொல்லாக மாறக்கூடும்.
உங்கள் சொற்களை கவனியுங்கள், அது செயலாக மாறக்கூடும்.
உங்கள் செயல்களை கவனியுங்கள், அது பழக்கமாக மாறக்கூடும்.
உங்கள் பழக்கங்களை கவனியுங்கள், அது குணமாக மாறக்கூடும்.
உங்கள் குணத்தை கவனியுங்கள், அது தலைவிதியை மாற்றக்கூடும்.
---வலைத்தளங்களில் கிடைத்தது.. நன்றி நன்றி 

கண்ணான கண்ணே நீ கலங்காதடி

கண்ணான கண்ணே
நீ கலங்காதடி
கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
நீ கலங்காதடி
நீ கலங்காதடி
யார் போனா
யார் போனா என்ன
யார் போனா
யார் போனா
யார் போனா என்ன
நான் இருப்பேனடி
நீ கலங்காதடி
ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே
என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே
நீ கண்ட கனவு எதுமே கலையகூடாதே
நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே
கிடச்சத இழக்குறதும்
இழந்தது கிடைக்குறதும்
அதுக்கு பழகுறதும் நியாயம்தானடி
குடுத்தத எடுக்குறதும்
வேற ஒன்ன குடுக்குறதும்
நடந்தத மறக்குறதும் வழக்கம் தானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீ தானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போனா என்ன நான் இருப்பேனடி
என் விரல் இடுக்குல உன் விரல் கெடக்கணும்
நசுங்குற அளவுக்கு இறுக்கி நா புடிக்கணும்
நான் கண்ணா தொரக்கையில் உன் முகம் தெரியணும்
உசுருள்ள வரைக்குமே உனக்கு என்ன புடிக்கணும்
கடல் அலை போல உன் கால் தொட்டு உரசி
கடல் உள்ள போறவன் நான் இல்லடி
கடல் மண்ண போல உன் காலோட ஒட்டி
கரை தாண்டும் வரை நான் இருப்பேனடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீதானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போனா என்ன நான் இருப்பேனடி
ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே
என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே
நீ கண்ட கனவு எதுமே கலையகூடாதே
நான் இருக்கும் நாள் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே
நித்தம் நித்தம் நீ ஒடஞ்சா
ஓட்ட வைக்க நான் இருக்கேன்
கிட்ட வச்சு பாத்துக்கவே உயிரே வாழுரேண்டி
பெத்தவங்க போனா என்ன
சத்தமில்லா உன் உலகில்
நித்தம் ஒரு முத்தம் வைக்கத்தான்
உயிர் வாழுரேண்டி

இதுவும் கடந்து போகும்..


நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.
எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன.
வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா?
வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா?
எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?
வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா?
இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல.* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.
*வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.*
*தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *சோர்ந்து விட மாட்டீர்கள்.*
*நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருக்கும் போது அவர்களை *கௌரவிப்பீர்கள்.* அவர்கள் விலகும் போது பெரிதாக *பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.*
*தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். தானாகப் *பொறுமை வரக்* காண்பீர்கள். பெரிதாக மனஅமைதியை இழக்க மாட்டீர்கள்.
*நெற்றி சுருங்கும் போதெல்லாம் "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். சுருக்கம் போய் *முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்.*
நினைவில் கொள்ளும் அவசியமே இல்லாமல் வாழ்க்கையின் ஜீவநாதமாக அந்த உண்மை உங்கள் இதய ஆழத்தில் பதிந்து போய் விட்டால் அந்தப் புன்னகை நிரந்தரமாக உங்கள் முகத்தில் தங்கி விடுவதை மற்றவர்கள் காண்பார்கள்.
வாழ்க வளமுடன்.

கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் ........


கணவன் பால் எனில் அதில் கலக்கப்படும் தண்ணீரைப் போல் இருந்திட வேண்டும் மனைவி.
பாலில் எவ்வளவு தான் தண்ணீர் கலந்தாலும்,தண்ணீரைத் தனியே பிரித்துக் காட்டும் குணம் பாலுக்கில்லை.
பாலைத் தனியே காட்டும் குணம் தண்ணீருக்கு இல்லை.
தண்ணீர் கலந்த பாலை அடுப்பில் வைக்கையில், தண்ணீர் நீராவியாகப் பிரிந்து செல்ல, அதைத் தாங்க முடியாத பால் கோபத்தில் பொங்கி எழுந்து மேலே வரும்.
பொங்கி வரும் பாலில் சிறிது தண்ணீர் தெளிக்க தன்னை விட்டுச் சென்ற தண்ணீர் தன்னிடம் திரும்பியதும், பால் கோபம் தணிந்து பாத்திரத்தில் அடங்கும்.
ஒரு வேளை அப்படித் தண்ணீர் தெளிக்கப்படவில்லை எனில் பால் பொங்கி எழுந்து அடுப்பையே அனைத்துவிடும்.
கணவனும் மனைவியும் ஒருவருக்குள் ஒருவர் அடங்கி இருக்கும் வரையில் தான் குடும்பம் எனும் நெருப்பு அணையாமல் இருக்கும்.
# புரிந்து கொள்ளும் காலம் தான் வாழ்க்கையின் வசந்தகாலம்.....
# எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பதைவிட எப்படி வாழ்ந்தோம் என்பதே வரலாறு.....
மறக்காமல் Like & Share செய்யுங்கள்....
👌படித்ததில் சிறந்தது👌

அவசரம் 108... தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள 3 இன் 1 செயலி


நாட்டிலேயே முதன் முறையாக 108 ஆம்புலன்ஸ் உதவிக்கு தமிழக அரசு செயலியை அறிமுகம் செய்துள்ளது. விபத்து, தீயணைப்பு மீட்பு பணிகள் துறை, காவல்துறைக்கு இந்த செயலியை பயன்படுத்தலாம். அவசரம் 108 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி மூலம் தொடர்புகொண்டால் அழைக்கும் இடத்தை கட்டுப்பாட்டு அறையால் எளிதில் கண்டுபிடித்து விட முடியும். சென்னை தலைமைச் செயலகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக 22 புதிய வாகனங்களை பயன்பாட்டிற்காக முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதே போன்று 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக நாட்டிலேயே முதன்முறையாக 'அவசரம் 108' என்ற செயலியையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசியதாவது : 108 ஆம்புலன்ஸ் வாகன உதவியை எளிதில் பெய அவசர 108 என்ற செயலியை ஐஐடி தயாரித்து அளித்துள்ளது. இது இன்று முதல்வரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 108 உதவி மையத்திற்கு நாள்தோறும் 17 ஆயிரம் அழைப்புகள் வருகின்றன. இவற்றல் 50 சதவீதம் ஆன்ட்ராய்டு போனில் இருந்து தான் அழைப்பு வருகிறது. எனவே விபத்து நடந்த பகுதியை எளிதில் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்டுபிடிக்கும் வகையில் இந்த செயலி உதவும். app for android ஆன்டிராய்டு போன்களில் கூகுள் பிளேஸ்டோர் மூலம் அவசரம் 108 (Avasaram 108) என்ற செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டால் போதும். காவல்துறை, விபத்து, தீயணைப்பு மீட்பு பணிகள் துறைக்கு இந்த ஒரே செயலி பயன்படும். இந்த செயலி மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால் உடனடியாக ஆம்புலன்ஸ் அந்த இடத்திற்கு சென்றுவிடும். இணையதள வசதி இல்லாமல் குறுந்தகவல் மூலமாக புகார் செய்யும் வசதியையும் முயற்சித்து வருகிறோம். இதே போன்று ஆன்ட்ராய்டு தவிர்த்து மற்ற போன்களில் பயன்படுத்தும் வகையில் இந்த செயலியின் சேவை விரிவாக்கம் செய்யப்படும். தமிழகத்தில் மெட்ரோ சிட்டிகளில் 108 ஆம்புலன்ஸ் சேவை 10 நிமிடத்திலும், கிராமப்புறங்களில் 14 நிமிடத்திலும் சென்றடைகிறது. மேலும் டூ வீலர் ஆம்புலன்ஸ் சேவை 9 நிமிடத்தில் மக்களை சென்றடைகிறது என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Monday 28 August 2017

வெற்றிலையின் மருத்துவ குணம்

சற்றே இதயவடிவம் போல கை அகல அளவில் சராசரியாக வளரும் பச்சை, இளம்பச்சை இலைகளே வெற்றிலையாக உண்ணப்படுகிறது.

புகையிலை, பாக்குடன் வெற்றிலை உண்பது தீய பழக்கமாகும்.

வெற்றிலை வலியைப் போக்கக்கூடியது. வீக்கத்தைத் தணிக்கக் கூடியது. வெற்றிலையை கடுகு எண்ணெய் விட்டு லேசாக வதக்கி வெதுப்பான சூட்டில் மார்பில் பற்றாகக் கட்டிவர மூச்சுத்திணறல் மற்றும் இருமல் குணமாகும்.

ஒரு வெற்றிலையினுள் ஐந்தாறு துளசி இலைகளை வைத்து சிறிது கசக்கிப் பிழிய வருகின்ற சாற்றினில் பத்து துளிகள் எடுத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, இருமல் குணமாகும். நெஞ்சு சளி கரைந்து மலத்தோடு வெளியேறும்.

திரிகடுகம் எனப்படும் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் சேர்ந்த மருந்தோடு வெற்றிலைச் சாறும் தேனும் கலந்து கொடுத்தால் ஆஸ்துமா என்னும் மூச்சிரைப்பு நோய், நெஞ்சுச் சளி இருமல் குணமாகும்.

பாம்பு கடித்தவருக்கு வெற்றிலைச் சாறு பருகக் கொடுப்பதால் விஷம் முறிந்து குணமாகும். இதனாலேயே இதற்கு நாகவல்லி என்றும் ஒரு பெயர் விளங்குகிறது.

வெற்றிலையை அரைத்து வாதம், விரைவாதம் ஆகியவற்றுக்கு மேல் பற்றாக கட்டினால், வீக்கமும் வலியும் குறைந்து நல்ல தீர்வு ஏற்படும். வெற்றிலைச் சாற்றோடு சமபங்கு இஞ்சிச்சாறும் தேனும் கலந்து குடித்தால் சுவாச கோளாறுகள் அத்தனையும் குணமாகும்.

அளவான வெற்றிலையை சுண்ணாம்புடன் மட்டும் சுவைப்பது பல்வேறு மருத்துவ குணம் கொண்டதாக அறியப்பட்டு உள்ளது.

வெற்றிலைச் சாற்றில் சிறிது கற்பூரம் சேர்த்து லேசாகக சூடு செய்து வெதுவெதுப்பான நிலையில் நெற்றிப் பொட்டுகளின் மேல் தடவ தலைவலி விலகும்.

இரவு தூங்கச் செல்லும் முன் 2 தேக்கரண்டி வெற்றிலைச் சாற்றுடன் சிறிது ஓமத்தைப் பொடித்து சேர்த்து குடித்துவர மூட்டு வலி, எலும்புவலி ஆகியன குணமாகும்.

வெற்றிலை அதிக அளவில் நீர்ச்சத்து நிறைந்தது. 6 வெற்றிலைகளில் 80 முதல் 85 சதவீதம் நீர்ச்சத்து காணப்படுகிறது.

மேலும் புரதம், தாது உப்பு, நார்ச்சத்து மற்றும் பல அத்தியாவசிய ரசாயனப் பொருட்களும் இதில் உள்ளன.

எந்த பூச்சி கடித்தது என்று தெரியாமல் ஏற்படும் பாதிப்பான காணாக் கடிக்கு நடுநரம்பு நீக்கிய வெற்றிலை 5, மிளகு 10 ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து, 200 மில்லி நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். அது 50 மில்லியாக ஆனவுடன் தினமும் 2 வேளை சாப்பிட்டு வர காணாக்கடி விரைவில் குணமாகும்.

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மெல்லும் போது உமிழ்நீர் சுரப்பு தூண்டப்படுகிறது. அத்துடன், ஒருவித உற்சாக உணர்வும் கிடைக்கி றது.

வாத நோய்களை குணமாக்கும் “வாத நாராயணா” எண் ணெய் தயாரிப்பில் வெற்றிலை சாறும் ஒரு முக்கிய மூலப் பொருளாகும்.

தீப்புண் குணமாக வெற்றிலையில் நெய் தடவி லேசாக வதக்கி புண்ணின்மீது பற்றாக போடவேண்டும். விரை வில் அந்த புண் குண மாகும்.

வெற்றிலைச்சாறு 5 மி.லி. யுடன் இஞ்சிச் சாறு 5 மி.லி. கலந்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற் றில் அருந்தி வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய் கள் அணுகாது. இவ்வாறு தொடர்ந் து ஒரு மண்டலம் அருந்தி வருவது நல்லது.

வயிற்றுவலி நீங்க 2 தேக்கரண்டி சீரகத்தை மூன்று தேக்கரண்டி வெண்ணெய் விட்டு நன்கு மைபோல் அரை த்து, 5 வெற்றிலை எடுத்து காம்பு, நுனி, நடு நரம்பு நீக்கி வெற்றிலையின் பின்புறத்தில் அந்த கலவையைத் தடவி சட்டியிலிட்டு வதக் கி பின்பு 100 மிலி நீர்விட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆறியபின்பு வடிகட்டி கசாயத்தை அருந்தி வந்தால் வயிற்றுவலி நீங்கும். மந்தம் குறையும்.

வெற்றிலை–4, வேப்பிலை – ஒரு கைப்பிடி , அருகம் புல் – ஒரு கை ப்பிடி. சிறிது சிறிதாக நறுக்கி 500 மி.லி. தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து 150 மி.லி.யாக வற்றவை த்து ஆறியவுடன் வடிகட்டி தினமும் மூன்று வேளை உணவுக்கு முன் 50 மி.லி. குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு சீராகும்.

அஜீரணக் கோளாறு அகல வெற்றிலை 2 அல்லது மூன்று எடுத்து அத னுடன் 5 நல்ல மிளகுசேர்த்து நீர்விட்டு காய் ச்சி குழந்தைகளுக்கு கொடுத்து வந் தால் சிறுவர்களுக்கு உண்டாகும் செரியா மை நீங்கும். வெற்றிலை இரண்டு எடுத்து நன்றாக கழுவி அதில் சிறிது சீரகத்தையும், உப்பையும் சேர்த்து நன்கு மென்று விழு ங்கி வந்தால் அஜீரணக் கோளா றுகள் நீங்கும்.

தீப்புண் ஆற தீப்புண்ணின் மீது வெற்றிலையை வைத்து கட்டலாம்.

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலை யுடன் அத்தி இலை 1 கைப் பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையை ச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.

தேள் விஷம் இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென் று விழுங்கி தேங்காய்துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

விஷக்கடி குணமாக உடலில் உள்ள விஷத்தன்மையை மாற்ற வெற்றிலை சிறந்த மருந்தாகும். சாதாரணமா ன வண்டுக்கடி, பூச்சிக்கடி இருந்தால் வெற்றி லையில் நல்ல மிளகு வைத்துமென்று சாறு இறக்கினால் விஷம் எளிதில் இறங்கும்.

குறைந்த ஆற்றல் வழங்குபவை வெற்றிலைகள். 100 கிராம் வெற்றிலையால் உடலுக்கு 44 கலோரிகள் ஆற்றலே கிடைக்கிறது.

6 வெற்றிலையில் 3.5 சதவீதம் அளவு புரதமும், 3.3 சதவீதம் தாதுஉப்புக்களும், கொழுப்புப் பொருட்கள் மிகக் குறைவாக கொண்டது வெற்றிலை.

6 வெற்றிலையில் 0.4 முதல் 1 சதவீதம் வரையே கொழுப்பு பொருட்கள் காணப்படுகின்றன

.நிகோடின் அமிலம் 100 கிராம் வெற்றிலையில் 0.89 மில்லிகிராம் அளவில் காணப்படுகிறது.

வைட்டமின்-ஏ 2.9 மில்லி கிராம் அளவும், இதர வைட்டமின்களான தயாமின் 70 மைக்ரோ கிராம், ரிபோபிளேவனி 30 மைக்ரோ கிராம், வைட்டமின் சி 0.01 சதவீதம் காணப்படுகிறது. இவை வளர்ச்சிதை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு உடற்செயல்களில் ஈடுபடுபவை.

உடலுக்கு அத்தியாவசியமான தாதுஉப்புக்களான பொட்டாசியம் 4.6 சதவீதமும், கால்சியம் 0.5 சதவீதமும், நைட்ரஜன் 7 சதவீதமும் காணப்படுகிறது.

இதில் பொட்டாசியம் இதய செயல்பாடுகளுக்கும், கால்சியம் எலும்பு மற்றும் பற்களின் உறுதிக்கும் அவசியமாகும். இரும்புத்தாது மற்றும் பாஸ்பரஸ் குறைந்த அளவில் காணப்படுகிறது.

பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் நோய்த் தொற்றுகளை தடுக்கவல்லவை.

டைபாய்டு, காலரா, காசநோய் கிருமிகளை கொல்லும் ஆற்றல்கூட இவற்றுக்கு உண்டு.

சில ரசாயனங்கள் மூளையை சுறுசுறுப்பாக செயல்பட தூண்டுகிறது.

புத்துணர்ச்சி தருகிறது.

வியர்வை சுரப்பிகள் நன்கு வேலை செய்ய தூண்டுகிறது.

6 வெற்றிலையை சுண்ணாம்பு தடவி சுவைப்பதால் ஒரு டம்ளர் பாலில் கிடைக்கும் தாதுக்கள் உடலுக்கு கிடைக்கிறதாம்.

வென்னீரில் வெற்றிலைகளை சேர்த்து கொதிக்க வைத்து தினமும் தண்ணீருக்குப் பதிலாக பருகி வந்தால் உடலில் பல்வேறு நோய்த்தொற்றுகளை தடுக்குமாம்.

மலச்சிக்கல், தலைவலி, சரும அரிப்பு, அழற்சி, நினைவிழப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கான மருந்து தயாரிப்பில் வெற்றிலைகள் சேர்க்கப்படுகிறது.

பாக்கு கலக்காத வெற்றிலை உடலுக்கு நன்மை பயக்கும். வயிறு உப்புசம், வாதம், பித்தம், கபம் எனப்படும் முப்பிணியைக் குணமாக்கும்.

வெற்றிலை மற்றும் இஞ்சி ஆகியவற்றின் சாறு எப்பேர்ப்பட்ட நுரையீரல் நோய்களுக்கும் உடனடி நிவாரணமாக அமையும். நாள் பட்ட நுரையீரல் நோய்களுக்கும் தீர்வாகும். வெற்றிலையை உணவுக்குப் பின்பு உண்டால் செரிமானம் ஆகும்.

வெற்றிலையுடன் மிளகு சேர்த்துத் தயாரிக்கப்படும் கஷாயம் உணவு செரிமானத்துக்கும் சளி, கபம் போன்றவற்றுக்கும், விஷ முறிவுக்கும் அருமருந்து.

குழந்தைகளுக்கு வரும் இருமலை வெற்றிலை சாறு மற்றும் சுண்ணாம்பு கலந்த கலவையை தொண்டை பகுதியில் தடவுவதன் மூலம் குணமாக்கலாம்.

அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

சீதம் நீக்கும், வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும்.

வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும்.

வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.

குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.

வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.

குழந்தைகளுக்கு மலர்ச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.

வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன் தரும்.

கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கோடுக்க வயிற்று உப்புசம், மந்தம், சன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம் வயிற்று வலி குணமாகும்.

வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். சிறப்பாக இதை இரவில் கட்டுவது நல்லது.

சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுக சூரணத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும். 5 கிராம் சூரணம்+10 மி.லி. வெற்றிலைச்சாறு தேன் 10 கிராம் கலந்து காலை, மாலை நோயிக்குத் தக்க வாறு 48-96 நாள் சாப்பிட வேண்டும்.

குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்பால் அதிகமாகச்சுரக்கும்.

வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலுட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

நுரையீரல் சம்பந்தமான நோய்களிக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்மடும்.

சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம்.

நுண்ணுயிர் தாக்கத்தினை எதிர்க்க வெற்றிலைச்சாறு உதவுகிறது.சைனஸ் பிரச்சினைக்கு வெற்றிலைச்சாறு தகுந்த நிவாரணம் அளிக்கக்கூடியது.

வயிற்றுக் கோளாறு நீக்க, கோழை இளக, ஜீரண சக்தி அதிகரிக்க வெற்றிலை பயன்படுகிறது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.

வெற்றிலைக்கு நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால் இதனை நாக இலை என்றும் அழைக்கின்றனர்.

வெற்றிலையை எண்ணெயில் நனைத்து விளக்கில் வாட்டி மார்பின்மேல் ஒட்டி வைக்க இருமல், மூச்சுத் திணறல், கடினமான சுவாசம், குழந்தைகளுக்கு இருமல் நீங்கும்.

வெற்றிலைச் சாறுடன் சுண்ணாம்பு கலந்து தொண்டையில் தடவினால் தொண்டைக்கட்டு நீங்கும்.

இரண்டு அல்லது மூன்று வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து தினமும் அருந்தினால் நரம்புகள் பலப்படும்.

புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்குண்டு.

வெற்றிலையை கற்ப முறைப்படி உபயோகித்து வந்தால் நல்ல ஆரோக்கியத்தைப் பெறலாம்.

வெற்றிலை இரத்த விருத்தியை அதிகரிக்கும். சுண்ணாம்பு 'கால்சியம்' ஆனதால் எலும்புகள் வலிமை பெறும். பாக்கு குடலில் பூச்சிகள் தாக்காமல் தடுக்கும். ஏலக்காய், பச்சைக்கற்பூரம், வால் மிளகு சேர்த்துக் கொண்டால் கபம் சேர்வதை குறைக்கும்.

தாம்பூலம் வாய்க்கு புத்துணர்ச்சி உண்டாக்கி, துர்நாற்றத்தை போக்கும்.

தாம்பத்தய உறவை மேம்படுத்தும்.

வெற்றிலையில் உள்ள நுண்கிருமிகளை அழிக்கும் சக்தியால் ஆஸ்துமா, காசநோய்கள் நீங்கும்.

செரிமானத்தை தூண்டும்.

பற்கள் உறுதியடையும்.

தாம்பூலம் நோய்தடுப்பு மருந்தாகும்.

பெண்கள் தாம்பூலம் தரித்தவுடனே, நன்றாக வாய், நாக்கு சிவந்தால் அவர்களுக்கு அமையும் கணவன் அந்தப் பெண் மீது பிரியமாக இருப்பான் என்று சொல்வதுண்டு.

ஆனால், ஒரு எச்சரிக்கை: தாம்பூலம் தரிப்பதுடன் தற்போது புகையிலையை சேர்ப்பது வழக்கமாகி வருகிறது. இது நிச்சயமாக வாய்புற்றுநோயை வரவழிக்கும் வழக்கம். தவிர வெற்றிலை பாக்கு போடுவதும் அளவுக்கு மேல் போகக்கூடாது.


Thank wikipedia

Tuesday 24 January 2017

தெரியுமா சேதி ? எப்படி அயல்நாடுகளின் பணமதிப்பு கணக்கிடப்படுகிறது?

தெரியுமா   சேதி ? எப்படி அயல்நாடுகளின் பணமதிப்பு கணக்கிடப்படுகிறது?

நீங்கள் அமெரிக்கா சென்றால், அங்கு எந்தப் பொருளையாவது வாங்க விரும்பினால் அந்த நாட்டின் பணமான டாலர்கள் கொடுக்க வேண்டும். அதற்காக நீங்கள் குறிப்பிட்ட இடங்களில் நமது நாட்டு பணத்தைக் கொடுத்து டாலர்களை மாற்றாக பெற்றுச் செல்ல முடியும்.

அங்கு நமது நாட்டு ரூபாய்க்கும், அந்த நாட்டின் டாலருக்கும் சரியான மதிப்பிட்டு தொகையை வழங்குவார்கள்.

உதாரணமாக நீங்கள் அறுபது ரூபாய் கொடுத்தால் ஒரு அமெரிக்க டாலரை திரும்ப பெறலாம். அதாவது ஒரு அமெரிக்க டாலர், இந்திய பணமதிப்பில் 60 ரூபாய்க்குச் சமமாகும். இந்த மதிப்பை எப்படி கணக்கிடுவார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

உலக பணப்பரிமாற்ற மதிப்பு ஒவ்வொரு நாட்டின் பொருளாதார நிலையைப் பொறுத்து மாறுபடும். ஒரு நாட்டின் குறிப்பிட்ட காலத்தில் சந்தையில் ஏற்படும் இறக்குமதி, ஏற்றுமதி தேவையைப் பொறுத்து இந்த பணமதிப்பு அவ்வப்போது மாறுபடும். இந்தியாவைப் பொருத்த அளவில் 1991 முதல் இந்திய- அமெரிக்க பண மதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் நீடித்து வருகிறது.
நாடுகளின் பணமதிப்பு கட்டுப்பாட்டிற்குள் இருப்பதும், கட்டற்று உயர்ந்துவிடுவதும் ஏற்றுமதி இறக்குமதியை மட்டுமே சார்ந்ததல்ல.

அரசியலில் நிகழும் முக்கிய மாற்றங்கள், அரசியல் ஸ்திரத்தன்மை, நாட்டு கடனின் வட்டிவிகிதம், கையிருப்புகள், ஏற்றுமதி இறக்குமதி மற்றும் பலவற்றையும் சார்ந்தது. முக்கியமான இவற்றைப் பொறுத்தே ஒருநாட்டின் பணமதிப்பு ஏற்றமோ, வீழ்ச்சியோ அடைகிறது. தேவைக்காக இறக்குமதி அதிகரிக்கும்போது அயல்நாட்டு பணத்தின் மதிப்பு அதிகரிக்கிறது, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது.

பல்வேறு நாடுகளும் தங்கள் நாட்டின் பணமதிப்பு உலக நாடுகளில் சரிவடையாமல் இருக்கும்படி கவனித்துக் கொள்கின்றன. பணத்தின் மதிப்பு ஏறி இறங்குவது அன்றைய  நிலவரத்தை பொறுத்தது. குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை மறுமதிப்பீடு செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

Saturday 8 October 2016

*இலங்கை வாழ் மக்கள் அறியவேண்டிய முக்கிய விடயம்! தவறாமல் படியுங்கள்.*

மனிதன் அன்றாடம் தனது வாழ்வில் பல சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது.

 பிறந்த குழந்தைகளிலிருந்து தள்ளாடும் வயோதிபர்கள் வரை உதவிகள் எப்போது தேவைப்படும் என்பது யாரும் அறியாத விடயம்.அவ்வாறு எதிர்பாராத நேரத்தில் ஏதேனும் விபரீதங்கள் நேர்ந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? யாருக்கு அறியப்படுத்துவீர்கள்? எவ்வாறு பிரச்சினைகளை தீர்ப்பீர்கள்? இவ்வாறு பல வினாக்கள் எழும்.

இதற்கான தீர்வுகளையே இப்போது உங்களுக்காக நாம் கொண்டுவந்துள்ளோம். ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்பட்டாலோ, விபத்துக்கள் ஏற்பட்டாலோ எடனடியாக கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துங்கள்.

1. அவசர பொலிஸ் பிரிவு - 119, 011-5717171

2. அம்புலன்ஸ் (கொழும்பு) - 110

3. பெண்களிற்கெதிரான வன்முறைகள்- 1938

4. அரச தகவல் பாதுகாப்பு திணைக்களம் - 1919

5. நீர் வடிகாலமைப்புச் சபை - 1939

6. போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகள் - 1984

7. குடியகல்வு மற்றும் குடிவரவு - 1962

8. கல்வி அமைச்சு - 1988

9. மொழிகள் சார் பிரச்சினைகள் - 1956

10. உளநலம் சார் பிரச்சினைகள் - 021222 6666

11. சட்ட உதவி ஆணைக்குழு - 021 222 4545

12. சிறுவர் துஸ்பிரயோகம் - 1929

13. பரீட்சை திணைக்களம் - 1911

14. உயர்கல்வி அமைச்சு - 1918

15. தேசிய உதவி மையம் - 118

16. போதனா வைத்தியசாலை விபத்துப்பிரிவு - 011-2691111

17. குருதி வங்கி - 011-2695728, 011-2692317, 011-2674799

18. செஞ்சிலுவை - 011-2672727

19. தீயணைப்பு பிரிவு மற்றும் அம்புலன்ஸ் - 011-2422222, 110

20. இராணுவ தலைமையகம் - 011-2432682

21. வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு - 011-2691500, 011-2437515, 011-2330646

22. குற்றப்பிரிவு - 011-2691500

23. பொலிஸ் தலைமையகம் - 011-2421111

24. மின்சார தடை - 011-2466660, 011-4617575

25. அவசர சுற்றுலாத்துறை பொலிஸ் - 011-2421052

26. தொலைபேசி இணைப்பு - 112

27. தேசிய அவசர பிரிவு - 011-2691095, 011-2699935

28. விபத்து பிரிவு - 011-2693184

29. சென்.ஜோன் அம்புலன்ஸ் சேவை - 011-2437744

30. மோசடி பணியகம் - 0112583512

31. சட்ட உதவி ஆணைக்குழு - 0112433618

32. கொழும்பு போதனா வைத்தியசாலை அம்புலன்ஸ் - 011-2691111

33. செஞ்சிலுவை அம்புலன்ஸ் - 011-5555505

34. மத்திய பேருந்து நிலையம் - புறக்கோட்டை - 011-2329606

35. கொழும்பு கோட்டை புகையிரத விசாரணை பிரிவு - 011-2434215

36. வடக்கில் தமிழில் முறைபாடுகளை மேற்கொள்ள - 076-6224949, 076-6226363

37. மின்வலு மற்றும் மின்சக்தி அமைச்சு - 1901

38. பொது நிர்வாக அமைச்சு - 1905

39. அபிவிருத்தி தொடர்பான தகவல்களும் முறைபாடுகளும் - 1912

40. இலங்கை விமான சேவைகள் மற்றும் விபரங்கள் - 1979

41. சூழல் தொடர்பான பிரச்சினைகள்மற்றும் முறைபாடு - 1991

42. விசாரணை மற்றும் கண்காணிப்பு- 1905

43. IMEI மீளாய்வு அலகு - 1909

44. விவசாயிகளுக்கான சேவைகள் - 1918

45. மனித உரிமைகள் தொடர்பான முறைபாடுகள் - 1996

46. வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களதுமுறைபாடுகள் - 1989

47. தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் - 1984

48. நுகர்வோரின் புகார்கள் மற்றும் ஆலோசனைகள் - 1977

49. பிரதமர் - 011-2321406

50. மக்கள் வங்கி தொடர்பான சேவைகள் - 0112481481

51. இலங்கை மத்திய வங்கி - 011-2477415, 011-2477411, 011-2477416, 011-2477417

52. இலங்கை மின்சக்தி நிறுவனம் - 1910

53. விவசாய அபிவிருத்தி மற்றும் கமநல சேவைகள் - 1920

54. அவசர அதிவேக பிரிவு - 1969

55. இலங்கை மின்சார சபை - 1987

56. தேசிய வைத்தியசாலை - 1959

57. தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு - 1966

58. வீதி அபிவிருத்தி அதிகாரசபை - 1968

59. தொழில்துறை ஒழுங்குமுறை ஆணையம் - 1900

60. புற்றுநோய் வைத்தியசாலை(மகரகம) - 011-2842052

Saturday 1 October 2016

இவர் யாரென்று எத்தனை பேருக்குத்தெரியும்

இவர் யாரென்று எத்தனை பேருக்குத்தெரியும்
சரி,தெரிந்து கொள்வதற்கு முன்பு இவருக்கு உங்கள் நண்றியைத் தெரிவித்துக்கொள்ளுங்கள்
ஏனென்றால் நீங்கள் இன்று வாழ்வதற்கு முக்கிய காரணமே இவர்தான்
DR. JONAS SALK, இவர்தான் போலியோவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர்
சரி எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த பல அறிவியலாளர்கள் இருக்கும்போது இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு
இவர் போலியோ தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த பிறகு Patented Right வாங்க மறுத்துவிட்டார் (அதாவது கண்டுபிடிப்பு உரிமம் சினிமாப்படம் Copy rights வாங்குவது போல)
அவர் அவ்வாறு செய்திருந்தால் உலகிலே மிகப்பெரிய பணக்காரர் ஆகியிருப்பார்
ஆனால் அப்படிச்செய்திருந்தால் பல கோடி ஏழைஎளிய மக்கள் அந்த மருந்தை வாங்கமுடியாமல் நோய்வாய்ப்பட்டு இறந்திருப்பார்கள்
பேட்டியொன்றில் "நீங்கள் ஏன் உரிமம் பெறவில்லை" எனக்கேட்டதற்கு "சூரியனுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமா" என்று கேட்டார் அந்த மாமனிதர்
பில்கேட்ஸ்,ஸ்டீவ் ஜாப்ஸ் போன்றவர்களைப்போற்றும் இந்த உலகம் இவரை யாரென்று கூடத்தெரிந்து கொள்ளாதது கசப்பான உண்மை
இவருக்கு நண்றி தெரிவிக்க நினைத்தால் இத்தகவலைப் பகிரவும்
உங்கள் நண்பர்கள் தெரிந்து கொள்ளட்டும்

follow in facebook

Friday 30 September 2016

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி....??




சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல,

உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு.

பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது,

சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள்

அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.

(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி),சரி நம்ம எப்படி
சீன,தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது.

இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்

,பார் கோடு என்பது machine readble format யில் இருக்கும்.

அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,

471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று

இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

போலி மருந்துகள் மாதிரி expiry date யை, இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது.

இனி மேல் பார்கோடை பார்த்து வாங்குங்க .

மற்ற நாடுகளின் முதல் எண்கள்

00-13: USA & Canada

20-29: In-Store Functions

30-37: France

40-44: Germany

45: Japan (also 49)

46: Russian Federation

471: Taiwan

474: Estonia

475: Latvia

477: Lithuania

479: Sri Lanka

480: Philippines

482: Ukraine

484: Moldova

485: Armenia

486: Georgia

487: Kazakhstan

489: Hong Kong

49: Japan (JAN-13)

50: United Kingdom

520: Greece

528: Lebanon

529: Cyprus

531: Macedonia

535: Malta

539: Ireland

54: Belgium & Luxembourg

560: Portugal

569: Iceland

57: Denmark

590: Poland

594: Romania

599: Hungary

600 & 601: South Africa

609: Mauritius

611: Morocco

613: Algeria

619: Tunisia

622: Egypt

625: Jordan

626: Iran

64: Finland

690-692: China

70: Norway

729: Israel

73: Sweden

740: Guatemala

741: El Salvador

742: Honduras

743: Nicaragua

744: Costa Rica

746: Dominican Republic

750: Mexico

759: Venezuela

76: Switzerland

770: Colombia

773: Uruguay

775: Peru

777: Bolivia

779: Argentina

780: Chile

784: Paraguay

785: Peru

786: Ecuador

789: Brazil

80 – 83: Italy

84: Spain

850: Cuba

858: Slovakia

859: Czech Republic

860: Yugoslavia

869: Turkey

87: Netherlands

880: South Korea

885: Thailand

888: Singapore

890: India

893: Vietnam

899: Indonesia

90 & 91: Austria

93: Australia

94: New Zealand

955: Malaysia

977: International Standard Serial Number for Periodicals (ISSN)

978: International Standard Book Numbering (ISBN)

979: International Standard Music Number (ISMN)

980: Refund receipts

981 & 982: Common Currency Coupons

99: Coupons

follow in facebook

பிரசவம் பற்றி நீங்கள் அறிந்திராத சில தகவல்கள்!!!


Wednesday 28 September 2016

காமப்பெருமூச்சு என்னை சுட்டெரித்த அந்த நாள்..! மகனுக்கு தாய் எழுதிய கடிதம்


தனது 5 ஆவது வயதில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான தாய், அந்த கொடுமையின் மூலம் தனது வாழ்வில் சந்தித்த மறக்கமுடியாத வலி மிகுந்த தருணங்களை தனது மகனுக்கு கடிதமாக எழுதியுள்ளார்.

அன்புள்ள மகனுக்கு,

எனக்கு 5 வயது இருக்கும். அன்று ஒருநாள் இருட்டிய அறையில் படுத்துக்கிடந்தேன். அப்போது எனது ஆடைகள் களையப்பட்ட நிலையில் இருப்பதை என்னால் உணர முடிந்தது.

அந்த படுக்கையில் இருந்து என்னால் நகர முடியவில்லை, என்னால் பேசமுடியவில்லை, எனது கண்களை கூட திறக்க முடியவில்லை. மிகுந்த அச்சத்தோடு படுத்திருந்த நான் மிகவும் சிரமப்பட்டு லேசாக கண்களை திறந்து பார்த்தபோது என் கண்முன்னே 3 ஆண்கள் நின்றுகொண்டிருந்தனர்.

அவர்கள், என்னை என்ன செய்தார்கள் என்பதை முழுமையாக என்னால் உணர முடியவில்லை.

ஆனால் இதற்கு முன்னால் அவர்களை நான் பார்த்திருக்கிறேன். என்னுடைய வீட்டிற்கு வருவார்கள், என்னோட சில நேரங்களில் விளையாடுவார்கள், எனக்கு சொக்லேட் வாங்கி கொடுத்திருக்கிறார்கள்.

காலங்கள் கடந்து எனக்கு 12 வயது ஆனது மற்ற சிறுமிகள் போலவே சைக்கிளில் நானும் பள்ளிக்கு சென்றேன். நான் பள்ளிக்கு செல்லும்போதெல்லாம் தெரு முனையில் உள்ள ஒரு ஆண் தினமும் நின்றுகொண்டு, என்னை பார்த்துக்கொண்டிருப்பான்.

என்னை விழுங்குவது போன்று பார்க்கும், அவனது அருகில் சென்று கன்னத்தில் ஒரு அறை கொடுக்க வேண்டும் என்று தோன்றும்.

ஆனால் எனது கோபத்தை உள்ளடக்கி கொண்டு, அத்தனை கோபத்தினையும் சைக்கிள் பெடல் மேல் காட்டி, அதனை வேகமாக அழுத்திகொண்டு பள்ளிக்கு சென்றுவிடுவேன்.

அதன் பின்னர் கல்லூரிக்கு செல்லும் வயதை எட்டினேன். கல்லூரிக்காக பேருந்தில் செல்கையில், ஆண்களின் காமப்பெருமூச்சுகள் என்னை சுட்டெரிக்கும்.

என்னதான் நாகரீமான ஆடைகளை அணிந்துசென்றாலும், அவர்களின் காமப்பார்வைகள் என்னைபோன்ற கல்லூரி பெண்களின் அங்கங்களை துளைக்கும்.

இதன் காரணமாக எனது வாழ்வில் பல்வேறு தியாகங்களை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.

எனது வாழ்வில் நான் சந்தித்த பாலியல் துன்பங்களின் காரணத்தினாலேயே, எனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.

ஏனெனில் நான் எனது வாழ்வில் சந்தித்த சோதனைகளை அவளுக்கு புரியவைத்து, சமுதாயத்தில் அவள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எவ்வாறு சமாளிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக.

ஆனால், எனக்கு மகனாக நீ பிறந்துள்ளாய். இருப்பினும் இந்த சமுதாயத்தில் உள்ள பெண்களுக்கு நீ மரியாதை செலுத்த வேண்டும். பெண்களை ஒருபோது எதிரிகளாக பார்க்ககூடாது. அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

பெண்கள் நம்பிக்கையான நல்ல நண்பர்களாக இருப்பார்கள், நீ எனக்கு மரியாதை கொடுக்கிறாய் என்றால், அது சமுதாயத்தில் உள்ள மற்ற பெண்களுக்கு மரியாதை கொடுப்பதற்கு சமம் என எழுதியுள்ளார்.

follow in facebook

காலையில் எழும் போது செய்யக்கூடாத விஷயங்கள்


தினமும் காலையில் எழுவது என்பது மந்தமான செயலாகும். பொதுவாக காலையில் எழும் போது, கை, கால்களை முறித்து விடுவது இயல்பாகும். அவ்வாறு முறிக்கும் போது மெதுவாக செயல்பட வேண்டும். இதுகுறித்து ஆன்மீக குரு மோகன்ஜி கூறுவதாவது, காலையில் எழும்போது, வலதுபக்கம் திரும்பி பின்னர் படுக்கையில் இருந்து எழும்ப வேண்டும் என்கிறார். இதன்மூலம் அந்த நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.



பொதுவாக காலையில் எழும் போது, தமது தசைப்பிடிப்புகளை எடுத்து விடுவது இயல்பான செயலாகும். அவ்வாறு செய்யும் போது முதுகுப் பகுதியை கடினமாக செயல்படுத்தக்கூடாது. மெதுவான முதுகு தசைப்பிடிப்புகளை 4 முதல் 5 சுற்று சுற்றி எடுத்து விட வேண்டும். மேலும் நீண்ட மூச்சுப் பயிற்சியின் மூலம் அந்த நாளை நீட்சி அடைய செய்யலாம்.

காலையில் எழுந்த உடன் சிறிது தண்ணீர் குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். உடலிலுள்ள நச்சுகளை அவை வெளியேற்றிவிடும். மேலும், அதன்பின்னர் காப்பி, டீ போன்ற தேனீர் குடிப்பது உடலுக்கு தீங்காகும். மேலும் இந்த வகையான அசிட்டிக் வகைகளை தவிர்ப்பது நல்லது.

காலை எழுந்த உடன் நமது கைப்பேசியிலோ அல்லது, கணிணியிலோ வருகின்ற எஸ்எம்எஸ் மற்றும் மெயில் போன்ற சொடுக்குகளை எழுந்த உடனே பார்பதை தவிர்ப்பது நல்லது. காலை பொழுதில் நமது சிந்தனைகளை மிக முக்கிய வேலைகளிலே செய்வது பலனாகும். இதில் நாம் 20:20:20 என்ற கொள்கையை மேற்கொள்ள வேண்டும். அவை 20 நிமிட உடற்பயிற்சி, 20 நிமிட தியானம், 20 நிமிடம் ஏதேனும் படிக்க வேண்டும் எடுத்துக்காட்டாக காலையிலே செய்திகளை படித்து அறிவது ஒரு சிறந்த முறையாகும்.

காலை உணவை தவிர்ப்பது என்பது மிக மிக தவறான செயலாகும். காலையில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நிலையாக இருக்காது, அதனை சரி செய்யவே காலை உணவு என்பது அனைத்து உயிர்களுக்கும் அவசியமான ஒன்று. காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு ரத்தத்தில் சர்கரையின் அளவு அதிகரித்து ரத்த அழுத்தம் ஏற்படும். இது நம் முன்னோர்கள் கூறும் முக்கியமான உணவுப் பழமொழி 'காலையில் ராஜாவைப் போல சாப்பிட வேண்டும்' 'மதியம் அளவரசனைப் போல சாப்பிட வேண்டும்' 'அரவில் பிச்சைக்காரரர்களை போல சாப்பிட வேண்டும்' என்று கூறியுள்ளனர். காலையில் பயிர் வகைகள், பிரெட் போன்றவற்றை எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது.

பொதுவாக அதிகாலையில் கண்விழிப்பது மிகவும் நல்லது. மேலும் பலர் போக்குவரத்துக்கு இடையே கடும் அவதிகளுக்குள்ளாகி அலுவலகதத்ற்கு செல்வது உண்டு. இவ்வாறு செல்வதால் மனிதர்களின் நேற்மறை ஆற்றலை இழக்கக் கூடும். 10 மணிக்கு முன்னாள் இயற்கையான சூழலை பார்ப்பதும், பறவைகளின் சத்தம், கடலின் ஓசை, மந்ரிரங்களை ஓதுவதும் சிறந்த செயலாகும்.

நமது உணவுகளை தயார் செய்வது பற்றி முன்கூட்டியே முடிவெடுத்து அதனை இரவே தயார் செய்து கொள்வது என்பது உடலுக்கு கேடு விளைவிக்கும் செயலாகும்.

பொதுவாக ஆண்களில் சிலர் காலை எழுந்தவுடன் புகைப்பிடிப்பதை பழக்கமாகக் கொண்டுள்ளனர். பொதுவாக புகைப்பிடிப்பது என்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. அதனை காலை எழுந்த உடன் செய்வது என்பது மிகவும் ஆபத்தான செயல், எனவே அதனை தவிர்ப்பது நல்லது. தண்ணீர் குடிப்பதற்கு முன் மற்றவைகளை தவிர்ப்பது மிகவும் சிறந்ததாகும்

follow in facebook