Tuesday 6 August 2013

Today messages

புதிதாக கல்யாணமான ஒரு கணவனும் மனைவியும் புதிய ஒரு நகரத்துக்கு குடியேறினார்கள்.
அடுத்த நாள் காலையில் இருவரும் ஹாலில் அமர்ந்து காபி குடிக்கும் போது,
பக்கத்துக்கு வீட்டு பெண் துணிகளை துவைத்துகாயப்போட்டுக்கொ ண்டிருப்பது
ஜன்னல் வழியாகதெரிந்தது.
அதை பார்த்த மனைவி கணவனிடம் 'அங்க பாருங்க, அந்த பொண்ணுக்கு துவைக்கவே
தெரியல. துணியெல்லாம் கருப்பு புள்ளிகளா இருக்கு' அப்படின்னு சொன்னா.
ஜன்னல் வழியேபார்த்த கணவன் ஒண்ணுமே சொல்லல.
பக்கத்துக்கு வீட்டு பொண்ணு தொவைச்சு காய போடறதும் அத ஜன்னல்வழியா பாத்து
மனைவி துவைக்க தெரியலன்னு சொல்றதும், கணவன் அதுக்கு ஒண்ணுமே சொல்லாம
இருக்குறதும் ரொம்ப நாளா நடந்துச்சு. திடீர்னு ஒரு நாள் மனைவி ரொம்ப
ஆச்சரியமா சொன்னா: இங்க பாருங்க! கடைசியில நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு
துணி துவைக்க படிச்சுட்டா. இன்னைக்கு துணிகளை சுத்தமா துவைசுருக்கா.
அதுக்கு அந்த கணவன்'அது வேற ஒன்னும் இல்ல. இன்னைக்கு காலையிலசீக்கிரமா
எழுந்து நம்ம வீடு ஜன்னல் கண்ணாடிகளை எல்லாம் நான் துடைச்சேன்'
அப்படின்னு சொல்லிட்டு காபி குடிக்க ஆரம்பிச்சான்.
இதனால் நான் சொல்ல வர்ற மெசேஜ் என்னானா: அடுத்தவனோட குறைகளா
நாமநெனைக்கிறது சில நேரங்களில் நம்மளோட பார்வை பிரச்சினையா கூடஇருக்கலாம்


--
J.PRABU

No comments: